பார்த்தீனியம் மேலாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் பல்லடம் வட்டத்தில் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பார்த்தீனியம் கட்டுப்பாடு குறித்த தொழில்நுட்பங்கள் விளக்கப்பட்டன.


Coimbatore: பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் 22 வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பார்த்தீனியம் பற்றியும், அதன் தீமைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாம், மத்திய அரசின் களை மேலாண்மை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டம், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்டது.



ஆகஸ்ட் 21 ஆம் தேதி, பல்லடம் வட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பார்த்தீனிய மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பார்த்தீனியம் என்ற நச்சுக்களையை உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த களை பூப்பதற்கு முன் நிலத்திலிருந்து அகற்றி உரமாக்கி மண்ணின் வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.



இந்த விழிப்புணர்வு முகாமில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப் பேராசிரியர் முனைவர் ச. பாரதி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமின் மூலம் விவசாயிகள் பார்த்தீனியம் களையின் தீமைகளை உணர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...