போத்தனூரில் கனமழையிலும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்கள்

கோவை போத்தனூரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய, இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மழையிலும் உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி பணியாற்றினர். இவர்களின் அர்ப்பணிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றது.



Coimbatore: கோவை போத்தனூரில் இன்று காலை திடீரென கனமழை பொழிந்தது. இதனால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

காலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த மின் தடையை சரிசெய்ய, அங்கிருந்த உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் ஏறினர். கொட்டும் மழையிலும் தங்களது பணியை மேற்கொண்ட இந்த ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோ காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. மழை வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்திலும் தங்களது கடமையை செவ்வனே ஆற்றும் மின்வாரிய ஊழியர்களின் பணி நேர்மையும், அர்ப்பணிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...