கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் 10ம் ஆண்டு விழா கூட்டம்

கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் 10ம் ஆண்டு விழா கூட்டம் மற்றும் 2017- 18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசோசியேசனின் ஆண்டு விழாக் கூட்டத்தின் தலைவர் என்.குருவாயூரப்பன் மற்றும் 2016-17 ஆண்டிற்கான தலைவர் ஆர்.சரவணராஜா இருவரும் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில் தலைமை விருந்தினராக ஜேசிஐ தேசிய துணைத் தலைவர் ஆர்.எஸ்.பிரபு கலந்து கொண்டு கொசினாவின் 2016-17 ஆம் ஆண்டின் செயல்பாடுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு மற்றும் புத்துச்சேரி அனைத்துக் கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.ராகவன் 2017-18 ஆண்டிற்கான நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

2017-18ம் ஆண்டிற்கான தலைவராக ஆர்.கார்த்திக், செயலாளராக ஜே.விஜயகுமார், பொருளாளராக பி.ராஜரத்தினம் உள்ளிட்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநிலக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.தில்லைராஜன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக செயலாளர் கே.பி.செல்வேள் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...