கோவையில் 23 கடைகளில் 90 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 253 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாத 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு காந்திபுரம், வ.உ.சி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ் புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் நடத்தப்பட்டது.



மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள், 18 மொத்த விற்பனையாளர்கள் அடங்கும். இந்த ஆய்வின் போது, 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கருத்து தெரிவிக்கையில், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்கள் குளிர்பானங்கள் வாங்கும் போது அவற்றின் காலாவதி தேதியை கவனமாக சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...