‘டபுள் டக்கர்-ஏசி, வைபை, டி.வி வசதியுடன் "உதய் எக்ஸ்பிரஸ்" ரயில் டெல்லி- லக்னோ தடத்தில் முதலில் இயக்கம்

இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களான டெல்லி- லக்னோ தடத்தில் இந்த ரயில் முதல்கட்டமாக இயக்கப்படும் எனத் தெரிகிறது.

‘உத்கிரிஷ்சித் டபுள் டக்கர் ஏ.சி. யாத்ரி எக்ஸ்பிரஸ்’ என்ற சொல்லின் சுருக்கமே ‘உதய்’ எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். தானியங்கி உணவு வழங்கும் எந்திரங்கள் மூலம் பயணிகள் உணவுகளையும், காபி, தேநீர், குளிர்பானங்களையும் வாங்கி பருகலாம். 

இது குறித்து ரயில்வேத் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், “ உதய் எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் அதிக மக்கள் பயணிக்கும் வழித்தடமான டெல்லி- லக்னோ தடத்தில் இயக்கப்படும். இதற்குக் கட்டணம் 3 அடுக்கு ஏ.சி. கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

அதே சமயம், பயணிகளுக்கு அதிகமான, சிறந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், பயணிகளுக்கு எல்.சி.டி. திரை, பயணிகள் கேட்க வைபை ஸ்பீக்கர்கள், வைபை வசதி போன்றவைகள் இருக்கும். படுக்கை வசதிகள் இல்லாத இந்த இரண்டு அடுக்கு ரயிலில் இரவு நேரத்தில் இயக்கப்படும். பயணிகளுக்கு படுக்கை வசதி இல்லாத போதிலும், வசதியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதி, நவீன வடிவமைப்பில் வண்ணமயமான பெட்டிகள், பயோ- கழிப்பறைகள் கொண்டதா இருக்கும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இந்த ரயில் செல்லும்’’ எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...