கோவையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

கோவை கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் ரங்கராஜ், நேற்று (ஆகஸ்ட் 18) வைசியாள் வீதி – ஒப்பணக்கார வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள துணிக்கடைகள் முன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்த ஒரு கும்பலை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், போலீஸ்காரர் ரங்கராஜை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரங்கராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், போலீஸ்காரரிடம் தகராறு செய்ததாக கரும்பு கடை சேரன் நகரைச் சேர்ந்த ஹக்கீம் (வயது 37), சர்புதீன் (வயது 35), சுண்டக்காமுத்தூர் ஹரிரவேந்தரா (வயது 21), உக்கடம் பிலால் எஸ்டேட் அன்சர் (வயது 28), செல்வபுரம் ஆதிபதி (வயது 24), கரும்புக்கடை சாரமேடு முகமது அஜ்மல் உசைன் (வயது 34) ஆகிய 6 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...