பாலக்காடு கோழிப்பாறை அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

பாலக்காடு கோழிப்பாறையில் உள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.



Coimbatore: பாலக்காடு அருகே உள்ள கோழிப்பாறையில் அமைந்துள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதாக மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

இந்த முகாமில் பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நீரிழிவு பாத நோய் சிகிச்சை, எலும்பு நோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு இலவச ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும், பவுத்திரம், மூலம், குடலிறக்கம், விரை வீக்கம், முதுகு வலி, மூட்டு வலி, முதுகு தண்டுவட பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கும் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது.



அஹல்யா நீரிழிவு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் பொது அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, நீரிழிவு பாத நோய் சிகிச்சை பிரிவு, எலும்பு நோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் முதன்மை மருத்துவர்கள் பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த தகவல்களை வெளியிட்டனர்.

அறுவை சிகிச்சைகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் சுரேஷ் பாபு கூறினார். பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...