கோவையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாட்டம்: சகோதர பாசத்தை வெளிப்படுத்திய வடமாநிலத்தவர்கள்

கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பார் கர்தர்கச் சங்க வழிபாட்டு மையத்தில் வடமாநிலத்தவர்கள் ரக்‌ஷா பந்தன் விழாவை கொண்டாடினர். உலக அமைதிக்காக பாடல்கள் பாடி வழிபட்டு, ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தினர்.


கோவை: கோவை நகரில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் வலிமையை உணர்த்தும் இந்த விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.

வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பார் கர்தர்கச் சங்க வழிபாட்டு மையத்தில் வடமாநிலத்தவர்கள் உலக அமைதிக்காக பாடல்கள் பாடி வழிபட்டனர். உலக அமைதியை முன்னிறுத்தும் விதமாகவும், அமைதியை வலியுறுத்தியும் மேளதாளம் இசைத்து பாடல்கள் பாடி உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.

வழிபாட்டுக்குப் பின்னர் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கும் ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தினர். பதிலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர்.

கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிறுகளை கட்டி சகோதர, சகோதரிகள் அன்பின் வலிமையை வெளிப்படுத்தினர். வடமாநிலத்தவரின் பண்டிகையான இது தற்பொழுது தமிழகத்திலும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...