ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனம் மீதான புகார் பொய்யானது - நிர்வாக இயக்குனர் தியாகராஜன் விளக்கம்

தாராபுரத்தில் ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனம் மீது கண்வலி விதை கொள்முதலில் மோசடி புகார். நிர்வாக இயக்குனர் தியாகராஜன் புகாரை மறுத்து, விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்கப்படுவதாக உறுதியளித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன், தமது நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்களை முற்றிலும் மறுத்துள்ளார்.



திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளிடமிருந்து செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலி விதைகளை கிலோவுக்கு ரூ.3200 வீதம் வாங்கி வருவதாகவும், அதற்கான பணத்தை சுழற்சி முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருவதாகவும் தியாகராஜன் தெரிவித்தார்.

கள்ளிமந்தத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் என்ற இருவர், ரெட் லீப் நிறுவனம் தங்களிடமிருந்து கண்வலி விதைகளை வாங்கி முழு பணத்தையும் வழங்கவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த புகார் முற்றிலும் பொய்யானது என தியாகராஜன் மறுத்துள்ளார்.

"சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் ஆகியோரிடமிருந்து எங்கள் நிறுவனம் கண்வலி விதைகளை கொள்முதல் செய்யவில்லை. அவர்களுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் பண பரிவர்த்தனையும் இல்லை," என்று தியாகராஜன் விளக்கினார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 1,786 கிலோ கண்வலி விதைகள் கொள்முதல் குறித்தும், பாதி பணம் மட்டுமே வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் தியாகராஜன் மறுத்தார். மேலும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், வங்கிக் கணக்குகளை முடக்குவதாகவும் உள்ள குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

"எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க முயலும் சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்," என்று தியாகராஜன் எச்சரித்தார்.

ரெட் லீப் நிறுவனத்திற்கு கண்வலி விதைகளை விற்பனை செய்த விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும், அனைவருக்கும் சுழற்சி முறையில் வங்கி மூலம் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தியாகராஜன் உறுதியளித்தார்.

மூலனூரில் நடைபெற்ற ரெட் லீப் நிறுவன ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பில், விவசாயி சிவகுமார் பேசுகையில், "கடந்த 30 வருடங்களாக கண்வலி விவசாயம் செய்து வருகிறேன். 15 வருடங்களாக ரெட் லீப் நிறுவனத்திற்கு விதைகளை விற்று பணம் பெற்று வருகிறேன். அவர்கள் எந்த விவசாயியையும் ஏமாற்றவில்லை," என்று தெரிவித்தார்.

"சுரேஷ் மற்றும் ராஜரத்தினம் போன்றோர் வேறு சில நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தங்கள் சுயலாபத்திற்காக போலி ஆவணங்கள் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். விவசாயிகள் யாரும் இதை நம்ப வேண்டாம்," என்று சிவகுமார் எச்சரித்தார்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...