அருந்ததியர் இளைஞர் கொலை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கோரி மனு

பொள்ளாச்சியில் கொலை செய்யப்பட்ட அருந்ததியர் இளைஞர் வழக்கை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யக் கோரி ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்ட அருந்ததியர் சமூக இளைஞர் அரவிந்த் வழக்கை பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (SC/ST) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரியும், இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இதர குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞர் அரவிந்த் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தாங்கள் செய்ததாக பைசல், விமல் என இருவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஆனால், காவல்துறையினர் இந்த வழக்கில் பல்வேறு உண்மைகளை மறைத்தும் திரித்தும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



கொலை செய்யப்பட்டவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்தும், இந்த வழக்கை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என்றும், கொலை வழக்கில் இதர குற்றவாளிகளான பிரவீன்குமார், தமிழ்செல்வன், குருபிரசாத் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கவில்லை என்றும் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கொலை நடந்த இடம் குறித்தும் காவல்துறை தவறான தகவலை பதிவு செய்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்டவரின் மனைவி ஹரிபுவனேஸ்வரியிடம் நிர்பந்தமாக கையொப்பம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...