கோவை கல்லூரியில் 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோனுடன் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா வித்தியாசமாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் வடிவமைத்த 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோன் கவனம் ஈர்த்தன.


கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோன் மூலம் விழா சிறப்பாக நடைபெற்றது.

3டி ஏ.ஐ. ரோபோட் கைகளில் தேசியக் கொடி ஏந்தி வாழ்த்து தெரிவித்தது. மாணவர்கள் வடிவமைத்த ட்ரோனில் நாட்டின் தேசியக் கொடி வானில் பறந்தது. தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மாதாந்திர உதவித்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய கப்பல் படை அதிகாரி கமோடர் பாலசுந்தரம் கலந்து கொண்டார். அவர் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். "நாம் 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு நாடாக மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இளைய தலைமுறையினர் தங்களுக்குக் கிடைக்கும் ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்பு, ஆதரவு மற்றும் வசதிகளை நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து முப்படையைச் சேர்ந்த தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு, மாணவர்களின் சிலம்பாட்டம், மற்றும் ட்ரோன் சாகசம் போன்றவை நடைபெற்றன. இந்த வித்தியாசமான சுதந்திர தின கொண்டாட்டம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...