கோவை புரானியில் 78வது சுதந்திர தின விழா: திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றினார்

கோவை புரானி காலனியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு சமூக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை புரானி காலனியில் உள்ள "மஸ்ஜித் உல் குத்பி" புரானி-தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு 2024 ஆகஸ்ட் 15 அன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவர் தனது சிறப்புரையில், அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் கோவை புரானி தவூதிபோரா அசோசியேசன் சங்க நிர்வாகிகள் தலைவர் ஷேக் மோயிஸ் காட்டாவாலா, பி.ஆர். செயலாளர் அலி அஸ்கர், பி.ஜி.ஐ.கேப்டன் ஹூசேபா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும், 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், 27வது வார்டு துணைச் செயலாளர் அ. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



வட்டப் பிரதிநிதிகள் வேலுச்சாமி, ரமேஷ் குமார், மாநகர் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, கழக மூத்த முன்னோடிகள் கிருஷ்ணமூர்த்தி, கங்குவார் சீனு, எல் எம் டபிள்யூ சீனு, புருஷோத்தமன், அக்பரலி, நடேசன், தேசிங்கு ராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த திலகவதி, அன்பரசி, விஜயகுமாரி, விஜயா உள்ளிட்டோரும், புரானி-தாவூதிபோரா அசோசியேசன் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தாவூதிபோரா இஸ்லாமிய பொதுமக்கள் பலரும் இந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...