தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய நூலகர் தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 12, 2024 அன்று தேசிய நூலகர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூலகத்தில் தேசிய நூலகர் தினவிழா ஆகஸ்ட் 12, 2024 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய நூலகத் தந்தை முனைவர் எஸ்.ஆர்.இரங்கநாதனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது.

மாணவர் நல மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், மாணவர்கள் நூலகம் மற்றும் நூல்களின் சிறப்பை அறிந்து கொள்ளவும், வாசிப்பின் நன்மைகளை உணரவும் வாய்ப்பளிக்கப்பட்டது. மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், நூலக வருகையை அதிகரிக்கவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.



மாணவர் நல மைய முதன்மையர் முனைவர் நா.மரகதம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அவர் தமது உரையில் வாசிப்பின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் ஞானத்தின் பயன்களையும் எடுத்துரைத்தார். கோவை எஸ்.என்.வி குளோபல் பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் முதல்வருமான முனைவர் சி.சாம்சன், நூலகத்தின் முக்கியத்துவத்தையும் நூலகர்களின் பெருமைகளையும் மாணவர்களுக்கு விளக்கினார்.



மண்ணியல் பேராசிரியரும் நூலகப் பொறுப்பாளருமான முனைவர் கே.எம்.செல்லமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் கே.தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நூலகர்களான பேராசிரியர் கே.பாலசுப்ரமணியன், ஆர்.போரையன், முனைவர் கே.பெருமாள்சாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், நூலகர் (பொறுப்பு) முனைவர் சி.ராணி நன்றியுரை வழங்கினார். இந்த விழா மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நூலகப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...