கோவையில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய அணி சாம்பியன்

கோவையில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் நடைபெற்ற ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய புட்பால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


கோவை: கோவை பாலக்காடு நெடுஞ்சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே டர்ஃப் டென்5 நவீன கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டி 11.8.2024 அன்று நடைப்பெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.



நாக் அவுட் முறையில் பகல் இரவு போட்டிகளாக நடந்த இந்த நிகழ்வில், கால்பந்து வீரர்கள் சாதுர்யமாக பந்தை கடந்து இலக்கை நெருங்கினர். மிகவும் சுவாரஸ்யமாக நடந்த இப்போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இந்தப்போட்டிகளில் முதல் இடத்தை அயோத்திய புட்பால் அணி 5 புள்ளிகளுடன் வென்றது. ஒரு புள்ளியுடன் ஃபிரண்ட்ஸ் புட்பால் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. மூன்றாவது இடத்தை 3 புள்ளிகளுடன் ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணி வென்றது. நேரு கலை அறிவியல் கல்லூரி அணி 2 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றது.

முதலிடம் வென்ற அயோத்தியா புட்பால் அணிக்கு பரிசுக்கோப்பையும், ரூபாய் 10,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் வென்ற ஃபிரண்ட்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 7,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், மூன்றாம் இடம் வென்ற ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், நான்காம் இடம் வென்ற நேரு கலை அறிவியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.

ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் தினேஷ்குமார் அவர்கள் வழங்கி, வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி வாழ்த்தினார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...