தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல் குறித்த மாணவர் கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 12 மற்றும் 13, 2024 அன்று "வேளாண் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல்" குறித்த 9வது வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. 1254 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் காலநிலை மாற்றம், வேளாண் வணிகமயமாக்கல் போன்ற முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகத்தில் ஆகஸ்ட் 12 மற்றும் 13, 2024 ஆகிய நாட்களில் "9வது வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம் (AGSC)" நடைபெற்றது.



"வேளாண் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர் தே.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் முனைவர் ந.செந்தில் கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும், எதிர்கால வேளாண்மைக்கான தீர்வுகளையும் விளக்கினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினரான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இயற்கை வள மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் ஆலோசகர் முனைவர் S.பாஸ்கர், வேளாண்மையில் காலநிலை மாற்றங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு, பாலைவனமயமாக்கல், கரியமில வாயுவை குறைத்தல், கரிம வர்த்தகம், சுழற்சி பொருளாதாரம் ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினார்.





வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி தலைமையுரை வழங்கினார். அவர் இந்த நூற்றாண்டுக்கான வேளாண் வணிகமயமாக்கல், இயந்திரமயமாக்கல் மற்றும் தன்னியக்கமாக்கலுக்கான முன்னெடுப்புகள், கருத்தரங்கத்தின் சிறப்புகள், பல்வேறு வேளாண் உட்துறைகளின் முக்கியத்துவம், பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் சாதனைகள் பற்றி விரிவாக பேசினார்.

இந்த நிகழ்வில் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 1254 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 427 சுவரொட்டி விளக்கக்காட்சிகளும், 66 வாய்வழி விளக்கக்காட்சிகளும் இடம்பெற்றன. கருத்தரங்க சுருக்கத் தொகுப்பு புத்தகத்தின் முதல் நகலை சிறப்பு விருந்தினர் முனைவர் S.பாஸ்கர் வெளியிட்டார். இக்கருத்தரங்கு தேசிய அளவில் எதிர்கால விவசாயத்திற்கு வழிக்காட்டும் முக்கிய முன்னெடுப்பாக அமைந்தது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...