வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

கோவையில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை எமர்ஜென்சி காலத்துடன் ஒப்பிட்டுள்ளார்.



கோவை: கோவை டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் கலவரங்களை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை அவர் விமர்சித்தார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடப்பதாகவும், அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி தவிப்பதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் எல்லையில் காத்திருப்பதாகவும், பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுவது உலகளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இதில் தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

"தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அழக்கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்," என்று அவர் கூறினார். நீதிமன்றத்தை நாடி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பெற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயமற்றது என்றும், ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல என்றும் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக அரசு எமர்ஜென்சி காலத்தைப் போல நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

"திமுக அரசாங்கத்திற்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கடவுள் தான் புத்தி கொடுக்க வேண்டும்," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது உரையை முடித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...