தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐசிசிஐ

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. மேலும் தமிழக விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 25) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், நடிகர் சங்கம், ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர்-வும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் தலைவர் வனிதா மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த போராட்டத்திற்கு ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் முழு ஆதரவு அளிக்கிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான திமுக-வும் ஆதரவு அளித்திருப்பதால் இந்த முழுஅடைப்பு வேலைநிறுத்தம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகப்படியாக உள்ளது.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்பதை வார்த்தைகயால் மட்டுமின்றி நடப்பிலும் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என வனிதா மோகன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...