தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் எம்.ஏ. பட்டதாரிகளுக்கு 50% இட ஒதுக்கீடு - அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

பொள்ளாச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிகளுக்கு தமிழ் எம்.ஏ. பட்டதாரிகளுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். பரம்பிக்குளம் ஆழியார் திட்ட நினைவு மணிமண்டபப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



கோவை: தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிகளுக்கு தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.



பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் ரூ.4.28 லட்சம் மதிப்பில் கட்டப்படும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட நினைவு மணிமண்டபப் பணிகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழில் எம்.ஏ. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு TNPSC மூலமாக உதவி இயக்குனர்கள் நியமனம் என்ற நடைமுறை இதுவரை இல்லை. தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஏற்கனவே தட்டச்சராக பொறுப்பேற்று அதன் பின் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்பு உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

மேலும், "வரும் காலங்களில் 50 சதவீதம் தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் செயல்படுத்த காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் V.K பழனிச்சாமி, N. மகாலிங்கம் உள்ளிட்டோரின் நினைவாக இந்த மணிமண்டபம் கட்டப்படுகிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...