ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியது: 1347 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியதை அடுத்து, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியதை அடுத்து, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், சோலையாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பியது.



கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும், நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால், ஆழியாறு அணை 6-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடியை எட்டியது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1225 கன அடியாக இருந்தது.

அணையின் பாதுகாப்பு நலன் கருதி, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...