கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுவாழ்வு பெற்ற அரசமரம்

கோவை மாவட்டம், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி பார்க்கேட் அருகில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 



இதற்காக, அப்பகுதியில் இடையூராக இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமைவாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவுசெய்துள்ளனர். 

பின், அதனை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்க முடிவு செய்த நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் ஓசை அமைப்பின் சையது அவர்களைத் தொடர்புகொண்டு மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஓசை சையது தலைமையிலான அமைப்பினர் மற்றும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து அந்த அரச மரத்தினை வேருடன் அகற்றி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுநடவு செய்தனர்.



மரம் மறுநடவு செய்யப்பட்டு ஒருவார காலத்திலேயே தற்போது துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது இப்பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...