கோவையில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு திமுக 27வது வட்டக் கழகம் மலர் அஞ்சலி

கோவையில் திமுக 27வது வட்டக் கழகம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தியது. பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) 27வது வட்டக் கழகத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், முத்தமிழ் அறிஞர் செம்மொழி நாயகர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பீளமேடு பகுதி 1 திமுக செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், 27வது வட்டக் கழக துணை செயலாளர் சாந்தி நகர் அ. செந்தில்குமார், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மேலும், கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, வட்டக் கழகப் பிரதிநிதிகள் வேலுச்சாமி, பூவை சுரேஷ், ரமேஷ் குமார், பூபதி, வட்டக் கழக துணை செயலாளர் புஷ்பவதி, வட்டக் கழக பொருளாளர் அங்கமுத்து ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கழக மூத்த முன்னோடிகளான ரங்கராஜ், மில் ரவி, அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, மதிவாணன், புருஷோத்தமன், கோவிந்தராஜ், நெல்லை குமார், தேசிங்கு ராஜன் ஆகியோரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப அணியின் சிங்காநல்லூர் தொகுதி பொறுப்பாளர் முகமது அன்சாரி, மகளிர் அணியினர் திலகவதி, விஜயா, விஜயகுமாரி உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்று, முன்னாள் முதல்வர் கலைஞருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தினர். இவ்வாறு திமுக 27வது வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...