உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.3.28 லட்சம் வசூல்

உடுமலை அருகே திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.3,28,403 வசூலானது. கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.



இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் வருகை தருகின்றனர்.



கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் 12 பொது உண்டியல்களில் இருந்து ரூபாய் நோட்டுகள் ரூ.2,99,360 மற்றும் நாணயங்கள் ரூ.27,621 ஆக மொத்தம் ரூ.3,26,981 வசூலானது. கோசாலை உண்டியலில் இருந்து ரூ.1,422 வசூலானது. ஆக மொத்தம் அனைத்து உண்டியல்களிலும் சேர்த்து ரூ.3,28,403 வசூலானது.



இந்த உண்டியல் எண்ணிக்கை நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, உறுப்பினர்கள் ராஜபாலன், ராதாகிருஷ்ணன், பானுரேகா, தேவராஜ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சரவணக்குமார், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடைசியாக கடந்த ஜூன் 12 அன்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...