நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என்ற மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்கி வருகிறது. இவர்கள் போர் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு விதி 406- படி உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டதும் அதில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் அமைப்பு நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய கூடாது என்றும், தடையை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.



மாநகராட்சியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தங்களது லாரிகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.

 

இந்த வேலை நிறுத்தத்தால் கோவை மாநகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...