பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் புகார்

பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் சங்கம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. வெளியூர் வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.1,000 வரை கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி மாட்டுச் சந்தை வளாகத்தில் மாநில மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாட்டு வியாபாரிகள் மற்றும் மாடுகளை ஏற்றி வரும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த சில நாட்களாக சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிமுகவைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதனைத் தடுத்து மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்த தீர்மானத்தின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். வெளியூரிலிருந்து மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிமுகவைச் சேர்ந்த சிலர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பணம் தராவிட்டால் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் மாட்டு வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...