கோவை பீளமேடு: தொழிலதிபர் வீட்டில் 43 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை பீளமேடு பகுதியில் தொழிலதிபர் மோனிஷ் ராஜனின் வீட்டில் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


கோவை: கோவை பீளமேடு, சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜின் மகன் மோனிஷ் ராஜன் (27) வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் மோனிஷ் ராஜன், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது தாயாருடன் தாராபுரத்தில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மோனிஷ் ராஜன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தமிழரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி திருடர்கள் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் பீளமேடு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...