ஒடிசாவிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்தல்: 7 பேர் கைது

கோவை ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒடிசாவிலிருந்து கோவைக்கு கடத்தி வந்த இவர்கள், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்தது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மதுவிலக்கு பிரிவு காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான காவலர்கள் கோவை ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, அவர்களின் பையில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சாகு (34), டிரேந்தர் பெர்க்ரா (24), ரஞ்சித நாயக் (23), பிரசாந்த் தாகூர் (36), சாகர் முகாரி (57), நரேந்திர திரிபாதி (30), பல்தே ஜிபிலா (20) என்பது தெரியவந்தது. மேலும், கஞ்சாவை விற்பனை செய்ய ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஏழு பேரையும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆறு செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...