முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் கோவையில் பண மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பவுண்டேஷன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.



புகாரின் விவரங்களின்படி, ஸ்ரீ லட்சுமி கார்டன், கீரணத்தம் அஞ்சல், கொண்டயம்பாளையம் ரோடு, கோயம்புத்தூர் என்ற முகவரியில் இயங்கி வரும் "டாக்டர் A.P.J அப்துல் கலாம் பவுண்டேஷன்" என்ற நிறுவனம், மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்குவதாகக் கூறி மக்களிடம் முன்பணம் பெற்றுள்ளது.

நிறுவனம் பணத்திற்கு ரசீது வழங்காமல், நன்கொடை ரசீது வழங்கியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியபோது, வருமான வரி பிரச்சினைகளைத் தவிர்க்கவே இவ்வாறு செய்வதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வதாகக் கூறிய நிறுவனம், ஆய்வு செய்த பிறகும் பல மாதங்கள் கடந்தும் கடன் வழங்கவில்லை.



முன்பணத்தை திரும்பக் கேட்டபோது, நிறுவனம் தர மறுத்ததோடு, புகார் அளிக்கப் போவதாகக் கூறியபோது அச்சுறுத்தலும் விடுத்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து, நிறுவனத்தை முழுவதுமாக தடை செய்து, தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோரியுள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...