உடுமலை திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மண்டல பாசனத்திற்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முதலாம் மண்டல பாசனம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்காக விவசாயிகள் தண்ணீர் திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், காண்டூர் கால்வாயின் நல்லாறு பகுதியில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து நேற்று மாலை காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.



வினாடிக்கு 523 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையில் தேவையான அளவு தண்ணீர் நிரம்பியதும், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடியில், 28.47 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...