உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டியில் சிறப்பு வழிபாடு

அடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னோர்களின் அறிவுரையின்படி இந்த வழிபாடு கால்நடைகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் அடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். மேலும் பலர் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திரளான பொதுமக்கள் தர்பணம் கொடுத்தனர்.

உடுமலை, பொள்ளாச்சி, Dharapuram, கிணத்துக்கடவு, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி, நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க இரட்டை மாட்டுவண்டிகளுடன் அடி அமாவாசையன்று திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், காங்கேயம் இன நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என்றும் விவசாயிகள் நம்புகின்றனர்.

"பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் இங்கு வருகிறோம். இதனால் கால்நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாக உணர்கிறோம்," என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...