கோவை கருமத்தம்பட்டியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் சு.முத்துசாமி

கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன், தொ.அ ரவி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



கோவைக்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதால், அன்று இச்சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...