தாராபுரத்தில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரம் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சரும் கட்சி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான S.V. செந்தில்குமார், தாராபுரம் நகர திமுக செயலாளர் சு. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...