தாராபுரத்தில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரம் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சரும் கட்சி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான S.V. செந்தில்குமார், தாராபுரம் நகர திமுக செயலாளர் சு. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...