வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது: பணப் பிரச்சினையே காரணம் என எஸ்.பி. தகவல்

கோவை செட்டிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே கொலைக்கு காரணம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.


Coimbatore: கோவை செட்டிபாளையம் அருகே நேற்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து விவரங்களை வெளியிட்டார்.

கொலை வழக்கில் 8 தனிப்படை போலீசார் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கோவையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் அய்யனார் என்ற செல்வம் மற்றும் கௌதம் ஆகியோர் வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர் என்றும் கூறினார்.



பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வாக்குவாதம் முற்றியதால், செட்டிபாளையம் அருகே காரை நிறுத்தி அய்யனாரின் நண்பர்களான அருண்குமார் மற்றும் அபிஷேக் ஆகியோரை வரவழைத்து, காரில் வழக்கறிஞருடன் சென்ற அய்யனார், கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் வழக்கறிஞர் உதயகுமாரை கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் கார், இரு சக்கர வாகனம், அரிவாள் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மட்டுமே இந்த கொலைக்கான காரணம் என்றும் எஸ்.பி. பத்ரி நாராயணன் உறுதிபட தெரிவித்தார்.



மேலும், இந்த ஆண்டு கொலை வழக்குகள் குறைந்துள்ளதாகவும், சமூக ஊடகங்களை கண்காணிக்க தனிக் குழுக்கள் இருப்பதாகவும் எஸ்.பி. கூறினார். கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...