கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் ஆகஸ்ட் 1 அன்று பொறுப்பேற்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு இரக மேம்பாட்டில் அனுபவம் கொண்டவர்.


Coimbatore: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் அவர்கள் ஆகஸ்ட் 1, 2024 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். புது தில்லியிலுள்ள வேளாண் விஞ்ஞானிகள் தேர்வாணையத்தின் (ASRB) பரிந்துரையின் படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இந்த நியமனத்தை செய்துள்ளது.

முனைவர் கோவிந்தராஜ் ஏற்கனவே கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பயிர் மேம்பாட்டுத்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர், 1991-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணிக்காக தேர்வானார்.

முனைவர் கோவிந்தராஜ் பயிர் இரகங்களை உருவாக்குதல், எரிசக்தி இரகங்களை உருவாக்குதல், மரபியல் இனங்களை சேகரித்தல் மற்றும் அவற்றை பெற்றோர்களாக பயன்படுத்தி புதிய கரும்பு இரகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட கோ 0232 மற்றும் கோ 0233 கரும்பு இரகங்கள் வட இந்தியாவில் பிரபலமானவை. மேலும், கோ 09004 கரும்பு இரகம் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

குறிப்பிடத்தக்க சாதனையாக, முனைவர் கோவிந்தராஜ் உருவாக்கிய SBIEC 14006 என்ற எரிசக்தி கரும்பு இரகம் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவரது சிறந்த பங்களிப்புக்காக 'சர். T. S. வெங்கட்ராமன் சிறந்த ஆராய்ச்சியாளர்' விருது உட்பட பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும், முனைவர் கோவிந்தராஜ் ஃபிஜி நாட்டின் கரும்பு ஆலோசகராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டு, அந்நாட்டின் தேசிய கரும்பு இரகங்கள் உருவாக்கத் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். இந்த நியமனம் கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...