பீளமேடு பகுதி -1 சார்பாக அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று இனிப்பு வழங்கும் நிகழ்வு

கோவை பீளமேடு பகுதி -1 சார்பாக, அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று நேரு நகரில் இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில், அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை வரவேற்கும் விதமாக இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பீளமேடு பகுதி -1 சார்பாக, 26 வது வட்டத்தில் நேரு நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 26 வது வட்ட கழக செயலாளர் ஆ.மாடசாமி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பகுதி துணை செயலாளர் லக்ஷ்மி, மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், வெ. துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. சி. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வட்ட கழக நிர்வாகிகள் குருசாமி, அனுசியா, தாமஸ் துறை, தகடூர் செல்வம், வேலுசாமி, பூபதி, வெங்கடேஷ், கார்த்திக், ரஞ்சித், சுந்தரராஜ், அனந்தி, காஸ்டிங் நடராஜ் உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் முன்னோடிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...