கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு வரவேற்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாட்டம்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது. இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.



2009ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2020ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை எனவும், பட்டியல் வகுப்பினர் வரையறையில் இருந்து உள்பிரிவுகள் விலக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு, உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடையில்லை என அறிவித்தது.



இத்தீர்ப்பை வரவேற்று, கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சி செந்தில், புரட்சி கழக முன்னணி மலரவன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் காமராஜ், கோவில்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...