விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, கள் இறக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில தலைவர் AS பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஆதார விலை இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்றும், விவசாயிகள் விவசாய தோட்ட பத்திரங்களை அடமானம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் வழங்கிய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கடன் பெறும் விவசாயிகளிடம் கடன் தொகையை திருப்பி கேட்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...