வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என உறுதியளித்தார்.


Coimbatore: வீட்டு வசதித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். வால்பாறையில் நிலச்சரிவால் வீடு இடிந்து உயிரிழந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது பேத்தி ஜனப்பிரியா குடும்பத்திற்கும், பொள்ளாச்சி திப்பம்பட்டியில் வீடு இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதன் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்ததாரர்களிடம் உறுதி பெற்றே பணிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.



திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், 60 இடங்களில் வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள மோசமான நிலையில் இருந்த கட்டிடங்களில் 90 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டி அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...