வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என உறுதியளித்தார்.


Coimbatore: வீட்டு வசதித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். வால்பாறையில் நிலச்சரிவால் வீடு இடிந்து உயிரிழந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது பேத்தி ஜனப்பிரியா குடும்பத்திற்கும், பொள்ளாச்சி திப்பம்பட்டியில் வீடு இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதன் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்ததாரர்களிடம் உறுதி பெற்றே பணிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.



திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், 60 இடங்களில் வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள மோசமான நிலையில் இருந்த கட்டிடங்களில் 90 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டி அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...