உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்த பசுமை தேசம்


இன்று உலக புவி தினத்தினை முன்னிட்டு கோவை பசுமை தேசம் சார்பில் மரக்கன்று நடும் விழா கொண்டாட்டப்பட்டது.



கோவையில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் சுமார் 6 அடி உயரமுள்ள இரண்டு வேப்பமரங்கள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்ற பசுமைதேசம் நிறுவனர் ராஜேந்தர் கூறுகையில், உலக புவி தினத்தை முன்னிட்டு புவியினையும், உயிரினங்களையும் பாதுகாத்திடும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



அதன்படி, இவ்வான்று மதுக்கரை சாலை, சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு இரண்டு வேப்ப மரக்கன்று நடப்பட்டது. இவை 6 அடி உயரம் கொண்டவை. ஏனெனில், வெயில் காலத்தில் சிறியளவிலான மரக்கன்றுகளை நட்டினால் அவை போதிய நீரின்மையாலும், வெப்பத்தினாலும் வாடிவிடும். எனவே தான் வளச்சியடைந்த வேப்பமரக் கன்று நடப்பட்டுள்ளது" என்றார்.



இந்நிகழ்வின் போது, பசுமை தேசம் உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...