வயநாடு மண்சரிவு: உயிரிழந்தவர்களுக்கு வானதி சீனிவாசன் இரங்கல்; நிவாரண உதவிக்கு பாஜக குழு தயார்

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த மண்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு பாஜக குழு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் காரணமாக, 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து வேதனையடைந்ததாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் மீண்டு வர இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அக்குழு தயாராக உள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை வானதி சீனிவாசன் ஜூலை 30 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...