வால்பாறையில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி பரிதாப உயிரிழப்பு

வால்பாறை சோலையார் அணைப்பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி உயிரிழந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோலையார் அணைப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் பாட்டி-பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வால்பாறை அருகே உள்ள சோலையார் அணைப்பகுதியில் 'இடது கரை' என்ற இடத்தில் ராஜேஸ்வரி (வயது 42) மற்றும் அவரது பேத்தி ஜனனபிரியா (வயது 14) ஆகியோர் தங்களது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு பெய்த கனமழையால் அருகில் இருந்த மண் குன்று இடிந்து குடியிருப்பின் மீது விழுந்தது.



இந்த சம்பவத்தில் குடியிருப்பு சேதமடைந்ததோடு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் ஜனனபிரியா மீது கற்கள் விழுந்து இருவரும் உயிரிழந்தனர். காலையில் அருகில் உள்ளவர்கள் இதனை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து கற்களை அகற்றி இருவரின் உடல்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...