கோவை கவுண்டம்பாளையத்தில் நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்த 50 வயது நீதிமன்ற ஊழியர் சந்திரசேகர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம் தெரியவில்லை.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (50) என்பவர் கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூலை 28) அவரது மனைவி பூங்கொடி, மகள் மற்றும் மகனுடன் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக சந்திரசேகரின் மனைவி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகரின் மனைவியும் குழந்தைகளும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...