கோவை மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்த சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்: 200 கோடி மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலம் மீட்பு

கோவை சரவணம்பட்டியில் சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் மாநகராட்சிக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது கண்டுபிடிப்பு. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்த தனியார் நிறுவனத்திடமிருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் வீட்டுமனைகளை அமைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு பேரூராட்சியாக இருந்த காலத்தில், 109 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டன. இதில் ஓபன் ஸ்பேஸ் ரிசர்வ் (OSR) என்ற வகையில் 10.5 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.



பின்னர் இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, நான்காவது வார்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சரவணம்பட்டி பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தை சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி ஆகியோர் முறைகேடான ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவணங்களை சேகரித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில், சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலம் இன்று மீட்கப்பட்டது. நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உடைமைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி வடக்கு மண்டல உதவி நகர அமைப்பு அலுவலர் சத்தியா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...