கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச இணை சீருடைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை இராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இலவச இணை சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை இராமநாதபுரம், பெருமாள் கோயில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ஜூலை 29 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஆர்.வெற்றிச்செல்வன், சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் அம்பிகா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாநகராட்சி துணை ஆணையர் மரு.ச.செல்வசுரபி, மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த இலவச இணை சீருடை வழங்கும் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...