வார சந்தை அனுமதிக்காக காந்திமா நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை காந்திமா நகரில் 10 ஆண்டுகளாக நடந்த வார சந்தைக்கு மீண்டும் அனுமதி கோரி 300 குடும்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு திடல் என்று கூறி சந்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சி 25-வது வார்டு காந்திமா நகர் பகுதியில் வார சந்தைக்கு அனுமதி அளிக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுதாரர்கள் தெரிவித்ததாவது: "கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும் வியாழன் மாலை வார சந்தை நடத்தி வந்தோம். தற்போது அந்தப் பகுதியை விளையாட்டு திடல் என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் சந்தை அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அங்கு சந்தை அமைக்க இயலாதவாறு வேலிகள் அமைத்துள்ளனர்."



"இதனால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள் என பலர் இந்த வார சந்தையை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே, இங்கு சந்தை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்கள் இந்த மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...