நீள்கிறது காந்திபுரம் பாலம் கட்டும் பணி : விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


காந்திபுரம் பகுதியில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. சுமார், ரூ.162 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் நஞ்சப்பா சாலையையும், சத்தி சாலையையும் இணைக்கும் விதமாக 1752 மீ நீளம் மற்றும் 26 மீ அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 55 தூண்கள் அமைக்கப்பட்டன. அதில், 53 தூண்களின் மீது காண்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. மேலும், 2 தூண்கள்  ஜி.பி. சிக்னல் பகுதியில் உள்ளன. இப்பகுதியில் இரண்டடுக்கு ரவுண்டான பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் காரணமாக காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக சென்று 100 அடி சாலையை அடைந்து மீண்டும் சத்தி சாலையை அடைகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பால பணிகள் முடிவடையும் என்று கூறப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தல் காரணங்களால் தற்காலிகமாக இந்த பணி நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது. மெத்தனமாக நடைபெறும் இந்த பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. தற்போது இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மின் கேபிள் பதிக்கும் பணி

100 அடி சாலை பகுதியில் உள்ள உயர் கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த கோபுரங்களால் இரண்டடுக்கு பாலம் கட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இதனால், உயர் மின் அழுத்த கேபிள்களை நிலத்தடியில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.13 கோடி செலவில் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் வாங்கப்பட்டன. தொடர்ந்து அவை நிலத்தடியில் பதிக்கப்பட்டன.

அடிக்கடி விபத்து

மேம்பால பணிகளால் ஜி.பி. சிக்னல் பகுதியில் உள்ள சிக்னல்கள் மற்றும் சாலை விளக்குகள் அகற்றப்பட்டுள்ளது.  சாலை விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பதட்டத்துடன் வகானத்தை இயக்குகின்றனர். அதனால், அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த விபத்துக்களால் இதுவரை உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இருந்த போதும் பெரிய அளவில் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பதுவும்,பணிகளை விரைந்து முடிப்பதும் மிக அவசியம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...