சேலத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை தலைவர் அறிவிப்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.


Coimbatore: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுவதாக அப்பேரவையின் மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, "சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்," என்று தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டிற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு 24 மணை தெலுங்கு செட்டியாருக்கு எம்.பி.சி உரிமை மீட்பு மாநாடாக நடத்தப்படுவதாகவும் ஜெகநாத் மிஸ்ரா உறுதிபடக் கூறினார்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...