பொள்ளாச்சியில் லாரி மோதி இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் நகர் பகுதியில் நேற்று மாலை பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நின்று கொண்டிருந்ததால், பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் இருவர் மீதும் ஏறியதில் அவர்களின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



உயிரிழந்த இருவரும் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்த கவி பிரகாஷ் (வயது 20) மற்றும் ஜெயபிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பரிதாப விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...