பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் நகர் பகுதியில் நேற்று மாலை பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து நடந்த நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நின்று கொண்டிருந்ததால், பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் இருவர் மீதும் ஏறியதில் அவர்களின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்த கவி பிரகாஷ் (வயது 20) மற்றும் ஜெயபிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பரிதாப விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நின்று கொண்டிருந்ததால், பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் இருவர் மீதும் ஏறியதில் அவர்களின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரும் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்த கவி பிரகாஷ் (வயது 20) மற்றும் ஜெயபிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பரிதாப விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.