கோவை கார் பந்தயத்தில் கேரள மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பில் கேரள மருத்துவர் பிரேம்லால் மாரடைப்பால் உயிரிழந்தார். பந்தயத்தின் போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கோவை எல் அண்டி பைபாஸ் சாலை அருகே ஜூலை 27 அன்று தொடங்கின. இப்போட்டியில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் பிரேம்லால் (46) பங்கேற்றார்.

போட்டியின் போது, மதியம் 1.30 மணியளவில் அரை மணி நேர சர்வீஸ் பிரேக் விடப்பட்டிருந்தபோது, காரில் இருந்து இறங்கி வரும் பிரேம்லாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பிரேம்லால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரேம்லால் செட்டிநாடு ஸ்போர்டிங் அணிக்காக மருத்துவர் ரிஷிகேஷுடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்றார். கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரேம்லால், பல முக்கிய கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரது மனைவி ஸ்மிஜா அரவிந்தும் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு விஷ்ணு மற்றும் அனிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவம் பிரேம்லாலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கார் பந்தயத்தில் பங்கேற்ற அனைவரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்லாலின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், முதல் நாள் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...